Header Ads



தடுப்பூசி பெற்று நாடு திரும்பும்போது, PCR சோதனைக்காக இனி ஹோட்டல்களில் தங்க வேண்டியதில்லை


முழுமையாக  தடுப்பூசி  பெற்றுக்கொண்ட   இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது  பிசிஆர்  சோதனைக்காக  இனி  ஹோட்டல்களில்  தங்க  வேண்டிய  அவசியமில்லை!

முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள்  போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய திட்டமானது அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்.

பிசிஆர் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருப்பின் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

No comments

Powered by Blogger.