ஞானசாரர் தெரிவித்துள்ள தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் - கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள்
நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞானசாரதேரரின் தகவல் குறித்து கத்தோலிக்க திருச்சபை கரிசனை அடைந்துள்ளது என அருட்தந்தை சிறிஸ்காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலை போன்ற தாக்குதல் இடம்பெறலாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்போகின்றார்கள் என்பது தெரியும் இதனை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். TL
Post a Comment