Header Ads



பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் நாட்டில் பொற்கால யுகம் ஏற்படும்


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில், கட்சிக்குள் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும் என ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அனைத்து சவால்களை எதிர்கொண்டு, கோவிட் தொற்று நோய்க்கு மத்தியில் மக்களைக் காப்பாற்றி நாட்டை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு சென்றிருந்த பசில் ராஜபக்ச தற்போது இலங்கை திரும்பியுள்ளார். அவர் குறுகிய காலத்தில் பொதுஜன பெரமுனவை உருவாக்கித் தேர்தல்களில் வெற்றிகளில் மிகப் பெரிய சக்தியாக இருந்தார்.

பசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளதால், கட்சிக்குள் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும் என நம்புகிறேன்.

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் நாட்டில் பொற்கால யுகம் ஏற்படும். இதனை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், சேறு பூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. எட்டாம் திகதியுடன் இந்த நாட்டில் பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது.எல்லோருக்கும் சுபீட்சம்.

    ReplyDelete
  2. எட்டாம் திகதியுடன் இந்த நாட்டில் பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது.எல்லோருக்கும் சுபீட்சம்.

    ReplyDelete
  3. எட்டாம் திகதியுடன் இந்த நாட்டில் பொற்காலம் ஆரம்பிக்கப் போகிறது.எல்லோருக்கும் சுபீட்சம்.

    ReplyDelete

Powered by Blogger.