Header Ads



1989 கிலோ, மஞ்சளுடன் 5 பேர் கைது


(அததெரண)

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு கடத்தி வரப்பட்ட 1989 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மூடைகளுடன் மன்னாரைச் சேர்ந்த 5 நபர்களை இன்று (14) காலை 7.55 மணியளவில் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு மஞ்சள் கட்டி மூடைகள் கடத்தப்படுவதாக இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் விரைந்து செயல் பட்ட இலுப்பைக்கடவை பொலிஸார் மூன்றாம் பிட்டி பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை(14) காலை வாகனம் ஒன்றில் கடத்தி வரப்பட்ட குறித்த மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றினர். 

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் 1989 கிலோ கிராம் நிறை கொண்டதோடு, குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மன்னாரை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்களும் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர். 

விசாரனைகளின் பின்னர் மீட்கப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மற்றும் வாகனம் என்பன மன்னார் நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட உள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 5 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

1 comment:

  1. பில்லியன் கணக்கில் கடத்துகிறார்கள் கொள்ளை அடிக்கிறார்கள்... கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.. ஒரு டன் மஞ்சளை பிடிக்க ஊர்ப்பட்ட ஆட்களும் ஆரவாரமும்...

    ReplyDelete

Powered by Blogger.