Header Ads



சண்டே டைம்சின் பத்திரிகையாளருக்கு கொரோனா


சண்டே டைம்சின் பத்திரிகையாளர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என விஜயா நியுஸ்பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற செய்தியாளர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார் வீட்டிலிருந்தவேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என விஜயா நியுஸ்பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன அலுவலகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுள்ளது பணியாளர்கள் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த முன்வந்துள்ளனர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் முதல் தங்கள் ஆசிரியபீட பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளனர், குறிப்பிட்ட நாட்களில் மாத்திரம் அலுவலகத்திலிருந்து பணியாற்றியவர்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றினார்கள் என விஜயா நியுஸ்பேப்பர்ஸ் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.