Header Ads



பாராளுமன்றம் போவதற்கு அனுமதி, கோரியுள்ள 'சொக்கா மல்லி'


மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, வெலிக்கட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொக்கா மல்லி எனப்படும் ​பிரேமலால் ஜயசேகர, 20 திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை, சிறைச்சாலைகள் தலைமையகத்தால், நீதிமன்ற அமைச்சுக்கு ​அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அமைச்சின் அனுமதிக்கு அமைய, பிரேமலால் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரலாம் என்றும் நம்பப்படுகின்றது.


நடை​பெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, 142,037 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.


 

2 comments:

  1. மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி மாவட்ட மக்கள் மாத்திரமல்ல இலங்கையின் சகல இன மக்களும் மிகுந்த இலகிய மனம் படைத்தவரகள்.

    ReplyDelete
  2. இரண்டாவது முறை மேற்கண்ட செய்தியைப் படித்ததும் எனக்கு ஒரு விடயம் தெளிவு இல்லாமல் போய்விட்டது. யாராவது நன்கு அறிந்தவரகள் விளக்கம் தர முடியுமா? மற்றவரகளுக்கும் விளக்கம் கிடைக்கும். குற்றம் புரிந்ததாக சந்தேகிப்படும் ஒருவர் அக்குற்றம் விசாரிக்கப்படுவதற்காக விளக்க மறியலில் வைக்கப்படுவார். அது நியதிதான். மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னரும் விளக்கமறியலில் அவரை ஏன் வைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.