Header Ads



இந்தியாவில் இருந்து 194 பேர் இலங்கை வருகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் சிக்கித்தவித்த 194 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான, இரு விசேட விமானங்கள் மூலம் குறித்த 194 பேரும் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். ஒரு விமானத்தில் 150 பேரும் மற்றைய விமானத்தில் 44 பேருமாக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.10 மணியளவில் குறித்த விமானம், 194 இலங்கையர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ. ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.