Header Ads



நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 33 பேர் - கடற்படையினர் 31 பேர்

நேற்று (04) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேரில் 31 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரகள் வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் என, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய இருவரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.