காலியில் 8 கடைகள் தீக்கிரை
காலி நகரிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதையடுத்து, 8 கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு(04) இடம்பெற்றுள்ளது. காலி பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, பொலிஸாரும், காலி நகர சபை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment