Header Ads



கடற்படையை சேர்ந்த 1 வது கொரோனா தொற்றாளர் பூரணமாக குணமடைந்தார்

இந்நாட்டில் இனங்காணப்பட்ட கடற்படையை சேர்ந்த முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 25ம் திகதி குறித்த கடற்படை வீரருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவரின் உடலில் வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று அவர் ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் குறித்த கடற்படை வீரரின் குடும்பத்தினர் புஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.