Header Ads



கச்சதீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை


கச்சதீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில், இந்தியாவில் ஏற்படும் முரண்பாடுகள் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை என்று அவர் கூறியுள்ளார்


மேலும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன.


எனினும், இலங்கை ஒருபோதும் கச்சதீவை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.