கட்டார் சென்ற இலங்கை பெண், தீ விபத்தில் சிக்கி உயிரிழப்பு
கட்டார் நாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த பெண்ணொருவர், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாரென, அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
அல்கோர் நகரிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோதே, குறித்த பெண் தீ விபத்தில் சிக்கியுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக கட்டாரில் பணியாற்றி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment