கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலை, குறித்த தகவல் பொய்யானது
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனரெனத் தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாதாதென, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில், விசாரணை நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் எச்சந்தர்ப்பத்திலும் சிறுவர்களுக்கான சிகிச்சையை இங்கு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment