Header Ads



தமிழ்நாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியன் முஸ்லிம் லீக் உதவிக்கரம்


இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு தேவைகளுக்காக அங்கு சென்றிருந்தவர்களே, இப்படி நிர்க்கதி ஆகியுள்ளனர்.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.  இதுகுறித்து  இந்தியத் தூதரகத்துடனும், இன்று வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

சமகாலத்தில் இருநாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும், இவ்விடயத்தில் தமது கவனத்தை செலுத்தியுள்ளன.

அதேவேளை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மேலும் ஒருதொகை இலங்கையர்கள், நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர்.

இவர்களுக்கு இந்தியன் முஸ்லிம் லீக் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் தலைவர் பேராசிரியர் காதர் மொஹதீன் தலைமையிலான குழுவினர் உதவிக்கரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.