தட்டுப்பாடிற்கு இடமளிக்காது உரத்தை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு
தட்டுப்பாடிற்கு இடமளிக்காது சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (03) பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களிற்குள் ஒரு தொகை உரம் இலங்கைக்கு வரவுள்ளதுடன் அவற்றை தாமதமின்றி விநியோகிக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment