Header Ads



புத்தளத்தில் சீன நாட்டவரின் சடலம் மீட்பு


புத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடா மெதவாச்சிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

65 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த இலங்கை பிரஜாவுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபர், உயிரிழந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த வயோதிபரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. ஏன் கொரோனாவை பற்றி மட்டும் சிந்திக்க மாட்டார்கள்?
    ஒன்று ஏனெனில், சீனப்பிரஜை,
    2- வயோதிபர்.
    இரண்டும் ஒன்று சேர்ந்து ஒத்துப்போகிறது.

    ReplyDelete

Powered by Blogger.