முஸ்லிம் திணைக்களத்தின் சுதந்திர தின நிகழ்வு - முஸ்லிம் அரசியல்வாதிகளும் பஙகேற்பு
முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களமும், கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலும் இணைந்து 72வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு முஸ்லிம் மதவழிபாடு நிகழ்ச்சியிகள் இன்று பெப்பரவரி காலை 06.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி ஜூம் ஆப் பள்ளிவசலில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதமா் சாா்பில் அதிதியாக ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் கலந்து கொண்டாா். இந் நிகழ்வில் முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அஸ்சேக் அஸ்ரப் , ஆளுனா் ஏ.ஜே.எம் முசம்மில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பிரதம மந்திரியின் ஆசிச் செய்தியை வாசித்தாா், மௌலவி அக்காம் மற்றும் கசன் மௌலானா ஆகியோா் துஆப் பிராத்தனைகளை நிகழ்த்தினாா்கள்
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சா்களான ரவுப் கக்கீம், ஏ.எச்.எம். பௌசி, பைசா் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரகுமான், முன்னாள் முதலமைச்சா் நஜீப் ஏ மஜீத், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்புச் செயலளாா் எம்.பர்சான் மற்றும் வெளிநாட்டு துாதுவா்கள் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் தலைவா்கள் உலமாக்களும் கலந்து சிறப்பித்தாா்கள். (அஸ்ரப் ஏ சமத்)
Post a Comment