கபீரின் மகளின் திருமண நிகழ்வில் ஏற்பட்ட அனுபவம் - சுதந்திரதின நிகழ்வுக்கு செல்வதை தவிர்த்த மைத்திரி
அண்மையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளின் திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள தான் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவினர் தன்னை இடையில் நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் இருந்து தான் நடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், இம்முறை சுதந்திர தினத்திலும் இப்படியான நிலைமை ஏற்படும் என நினைத்து சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என கேட்ட போது தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை கூறியுள்ளார்.
இவர் நடந்துசெல்வதைத் தவிர்த்து நான்கு கால்களில் செல்ல வைக்க இந்நாட்டுமக்கள் முன்நிற்க வேண்டும். இவர் இந்த நாட்டுக்கு இழைத்த பாரிய நட்டங்களை மக்கள் விளங்கிக் கொள்ளவே நீண்ட காலம் எடுக்கும்.
ReplyDeleteபதவி யில் இருக்கும் போது ஆடிய ஆட்டமென்ன ; சுற்றாத நாடுகளென்ன சொல்லாத பொய் என்ன ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ................................
ReplyDeleteஇவனுக்கு மிக மோசமான முடிவு உண்டு என ஊகிக்க முடியும்.. இவனே முழு இலங்கை முஸ்லிங்களையும் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட காரணமாக இருந்தவன்..
ReplyDeleteஅல்லாஹ்வின் பிடி மிக கடுமையானது..