Header Ads



முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கடும் நம்பிக்கை உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவை பக்கமுன பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்கு வர தான் தீர்மானித்துள்ளேன்.

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு செல்வது எனக்கு அவமரியாதை. பொலன்நறுவை மக்கள் தொடர்பாக எனக்கு கடும் நம்பிக்கை உள்ளது” என்றார்.

2 comments:

  1. டேய் நரிமூஞ்சி! உச்சாபோயிட்டு வீட்டபோய் பாயப்போட்டு தூங்குடா. சீரியசா கொமெடி பண்ணாதடா.

    ReplyDelete

Powered by Blogger.