4/21 தாக்குதல் - கட்டாரில் கைதான இலங்கையரை அழைத்துவர நடவடிக்கை
ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராகக் கருதப்படும் ஒருவரை, 4/21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைதுசெய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்கிய உறுப்பினர் பஸ்ஹுல் சஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேணியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், கட்டாரில் தடுப்பில் உள்ள சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்துவந்து விசாரிக்கும் பணிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எம்.எப்.எம்.பஸீர்
Post a Comment