பர்ஹான் ஹனிபா தலைமைப் பணியாளராக பணியாற்ற, வூஹானிலிருந்து ம மீட்கப்பட்ட இலங்கை மாணவர்கள்
கொரோனா வைரஸ் பரவலினால், மிக பாரியளவில் தாக்கத்துக்குள்ளாகி வரும் சீனாவின் வுஹானில் உள்ள 33 இலங்கை மாணவர்களை மீட்கும் பணியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யுஎல் -1423 விமானக் குழுவினர் ஈடுபட்டு அதனை வெற்றியுடன் நிறைவேற்றியுள்ளனர்.
இப்பயணத்தில் ஈடுபட்ட அனைவரும், குறித்த வைரஸ் பரவாமல் தடுக்க சிறப்பு ஆடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் 33 மாணவர்களுடன் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இந்த சிறப்பு விமானத்தின் பணியில் ஈடுபட்ட விமானிகள் சமிந்தா சோய்சா மற்றும் அனுஷ்கா ஜிவேந்திரா.
இவ்விமாணத்தில் ஃபர்ஹான் ஹனிபா தலைமைப் பணியாளராகவும், லிலாந்தா பட்பேரியா மற்றும் ரூமேஷ் பதிராஜா விமானப் பொறியாளர்களாகவும் பணியாற்றியிருந்தனர்.
May Allah bless them with best in thier life
ReplyDeleteWish you all the Best to Sri lankan Airlines!!
ReplyDelete