Header Ads



பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள், அரச செலவில் கனத்தையில் அடக்கம்

கொழும்பு, ஷெங்கிரீலா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் சஹ்ரான் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகிய பயங்கரவாதிகளின் உடல்களை அரசாங்கத்தின் செலவில் பொரள்ளை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று -18- உத்தரவிட்டுள்ளார்.

திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்திற்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரிகளின் உடல் பாகங்களை அவர்களின் உறவினர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்து, விடுத்த கோரிக்கையை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உடல் பாகங்களை அடக்கம் செய்வதற்காக தற்போது சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருக்கும் குண்டுதாரிகளின் உடல் பாகங்களை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறும் நீதிமன்றம் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.