கொழும்பில் உணவக சோற்றுப் பொதியில், நத்தை இருந்தமை கண்டுபிடிப்பு
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் உணவு பரிமாறப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிய நேர உணவுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சோற்றுப் பொதியில் நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவுகளை விநியோகிக்கும் நடமாடும் சேவையாக ஊபர் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட உணவுப்பொதியிலேயே நத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தமை தொடர்பில், பாதிக்கப்பட்டவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
உணவின் ஒரு பகுதியை உட்கொண்ட பின்னரே நத்தை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மிகவும் அருவருப்பான அனுபவமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். இதன்போது உணவகத்தின் களஞ்சியத்திலிருந்து அரிசி பொதியில் நத்தைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது சைனிஸ் புட் ஆக இருக்கலாம்.
ReplyDelete