Header Ads



'அப்பே ஸ்ரீ' அமைப்பின் அடுத்தக்கட்ட, வியூகங்களை வகுக்கும் பணியில் சந்திரிக்கா

சுதந்திர கட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'அப்பே ஸ்ரீ' அமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பான வியூகங்களை வகுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க இன்று -03- அத்தனகலையில் முக்கிய சந்திப்பொன்றை நடத்துகின்றார்.

இச்சந்திப்பில் பங்கேற்குமாறு சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் உட்பட தம்முடன் இணைந்து பயணிக்க விரும்பு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறுகின்ற மாநாடு குறித்தும் ஆராயப்படவுள்ளது. 

அத்துடன் சந்திரிகா தலைமையேற்றுள்ள அப்பே ஸ்ரீ அமைப்பில் சுதந்திரக்கட்சியின் முக்கிய சில பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளீர்ப்பது பற்றியும் இச்சமயத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அதனுடன் இணைந்து எவ்வாறு பயணிக்க முடியும் என்ற வகையில் கடுமையான விமர்சனங்கள் சந்திரிகா மீது எழுந்துள்ள நிலையில் அதற்குரிய விளக்கங்களையும் அவர் அளிக்கவுள்ளதாகவும் மேலும் அறிய முடிகின்றது.

No comments

Powered by Blogger.