Header Ads



முஸ்லிம் உலகில் ஒற்றுமையில்லை - 100 ஆவது வயதிலும் வருத்தப்படும் மகாதீர் முகம்­மது

 


மலே­சி­யாவின் முன்னாள் பிர­தமர் மகாதீர் முகம்­மது தனது 100ஆவது பிறந்த நாளை கடந்த 10 ஆம் திகதி கொண்­டா­டினார். இதனை முன்­னிட்டு துருக்­கியின் அன­டோலு செய்தி நிறு­வ­னத்­திற்கு அவர் அளித்த நேர்­காணல்.


கேள்வி: சுமார் அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக அர­சி­ய­லிலும் பொதுச் சேவை­யிலும் ஈடு­பட்­டுள்ள நீங்கள், உங்கள் 100வது பிறந்­த­நாளைக் கொண்­டா­டு­கி­றீர்கள். ஒரு உலகத் தலைவர் இந்த மைல்­கல்லை எட்­டு­வது அரி­தா­னது. ஜன­நா­யகம் குறித்து உங்கள் கருத்து என்ன?


மகாதீர்: ஜன­நா­யகம் என்­பது மனி­தனால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு கண்­டு­பி­டிப்பு. அது குறை­பா­டற்­றது அல்ல. அதி­லி­ருந்து நன்­மையைப் பெற வேண்­டு­மானால், அதை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­வது என்­பதை நீங்கள் அறிந்­தி­ருக்க வேண்டும்.


கேள்வி: நீங்கள் மலே­சியப் பிர­த­ம­ராக இரண்டு முறை பதவி வகித்­தவர். ஜன­நா­யகம் உங்­க­ளுக்குப் பல நன்­மை­களை அளித்­தி­ருந்­தாலும், பல கட்சி அமைப்­புகள் குறித்து நீங்கள் ஏன் விமர்­சனப் பார்வை கொண்­டி­ருக்­கி­றீர்கள்?


மகாதீர்: ஒரு ஜன­நா­ய­கத்தில் இரண்டு கட்­சிகள் மட்­டுமே இருக்க வேண்டும். இரண்டு கட்­சிகள் போட்­டி­யி­டும்­போது, ஒன்று அல்­லது மற்­றொன்று வெற்றி பெற்று ஒரு வலு­வான அர­சாங்­கத்தை அமைக்கும். ஆனால், எல்­லோரும் தலை­வ­ராக விரும்­பும்­போது, மக்கள் சிறிய குழுக்­க­ளாகப் பிரிந்து, அர­சாங்­கத்தை அமைக்கத் தேவை­யான பெரும்­பான்­மையை அடைய முடி­வ­தில்லை. பல சந்­தர்ப்­பங்­களில் ஜன­நா­யகம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது.


கேள்வி: இன்­றைய உலக அர­சியல் யதார்த்­தங்­களில், காஸா மீதான இஸ்­ரேலின் போர் குறித்த உங்கள் பார்வை என்ன? உலக சக்­தி­களின் நிலைப்­பாடு குறித்து என்ன நினைக்­கி­றீர்கள்?


மகாதீர்: காஸா போன்ற ஒரு அநீ­தியைக் காணும்­போது, அதைத் தடுக்க நாம் ஏதா­வது செய்ய வேண்டும். ஆனால் இங்கே, எம்மால் அதைத் தடுக்க முடி­ய­வில்லை, ஏனென்றால் இந்த இனப்­ப­டு­கொ­லைக்குப் பின்னால் அமெ­ரிக்கா உள்­ளது. அமெ­ரிக்கா இனப்­ப­டு­கொ­லையைத் தடுக்க முயற்­சிப்­ப­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அச்­சு­றுத்­து­கி­றது. இது மேற்­கு­லக நாக­ரி­கத்தின் சரிவைக் காட்­டு­கி­றது. நன்மை மற்றும் ஒழுக்க விழு­மி­யங்கள் இழக்­கப்­பட்டு, நவீன நாக­ரிகம் தோல்­வி­ய­டைந்து, நாம் பழ­மை­யான நிலைக்குத் திரும்­பி­விட்டோம்.


கேள்வி: காஸா விட­யத்தில் அமெ­ரிக்­காவின் பங்கு குறித்து நீங்கள் என்ன நினைக்­கி­றீர்கள்?


மகாதீர்: இன்று, அமெ­ரிக்கா மனித உரி­மை­களைப் பற்­றியோ, மனித உயிர்­களைப் பற்­றியோ கூட கவ­லைப்­ப­டு­வ­தில்லை என்­பதை நாம் அறிவோம். அது உலகின் ஏனைய நாடு­க­ளுக்கு ஒரு முன்­மா­திரி அல்ல. ஒரு உல­க­ளா­விய தலை­வ­ராக அமெ­ரிக்கா தனது நம்­ப­கத்­தன்­மையை இழந்­து­விட்­டது.


கேள்வி: 1964 இல் மலே­சிய நாடா­ளு­மன்­றத்தில் நுழைந்­ததில் இருந்து, உங்கள் அர­சியல் பயணம் குறித்து ஒரு முழு­மை­யான கண்­ணோட்­டத்தைப் பகிர்ந்து கொள்ள முடி­யுமா?


மகாதீர்: மருத்­துவம் படித்த பிறகு, 21 வயதில் ஐக்­கிய மலாய் தேசிய அமைப்பில் (UMNO) சேர்ந்து அர­சி­யலில் ஈடு­பட்டேன். மலே­சிய சுதந்­தி­ரத்­திற்குப் பிறகு 1964 இல் நாடா­ளு­மன்­றத்தில் நுழைந்தேன். 1981 இல் பிர­த­ம­ரானேன், கிட்­டத்­தட்ட 22 ஆண்­டுகள் பணி­யாற்­றினேன். எனது ஆட்­சியில், மலே­சியா தென்­கி­ழக்கு ஆசி­யாவில் பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் மேம்­பாட்டின் கலங்­கரை விளக்­க­மாக மாறி­யது. 2018 இல் மீண்டும் ஆட்­சிக்கு வந்தேன், ஆனால் இரண்டு ஆண்­டு­க­ளுக்குப் பிறகு கூட்­டணி கட்­சி­களின் ஆத­ரவை இழந்­ததால் பதவி வில­கினேன். நான் பிர­த­ம­ராக வருவேன் என்று ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை, ஆனால் சரி­யான நேரத்தில் நான் அந்த இடத்தில் இருந்தேன்.


கேள்வி: உங்கள் நீண்ட ஆயுளின் இர­க­சியம் என்ன?


மகாதீர்: எனக்கு உண்­மையில் தெரி­யாது. நீங்கள் ஆபத்­தான நோய்­களால் பாதிக்­கப்­ப­டாமல் இருந்தால் நீண்ட காலம் உயிர் வாழலாம். நான் சில உடற்­ப­யிற்­சி­களைச் செய்­கிறேன். எனது மன­தையும், மூளை­யையும், வாசிப்பு, எழு­துதல், பேசுதல், உரை­யாடல், விவா­தங்கள் மூலம் சுறு­சு­றுப்­பாக வைத்­தி­ருக்­கிறேன். உட­லையும் மன­தையும் சுறு­சு­றுப்­பாக வைத்­தி­ருப்­பது அவ­சியம் என்று நான் நம்­பு­கிறேன். என் மனைவி சித்தி ஹஸ்மா எனது நீண்ட பய­ணத்தில் எனக்கு எப்­போதும் ஆத­ர­வாக இருந்­துள்ளார்.


கேள்வி: மலே­சி­யாவின் எதிர்­காலம் மற்றும் முஸ்லிம் உலகம் குறித்து உங்கள் கருத்து என்ன?


மகாதீர்: மலே­சியா தனது இலட்­சி­யங்­களை அடைய, அதன் பொரு­ளா­தாரம் சரி­யாக முகாமை செய்­யப்­பட வேண்டும். மேலும் நாடு “அர­சியல் ரீதி­யாக ஸ்திர­மா­ன­தான” இருக்க வேண்டும். நாட்டு மக்கள் நாட்டின் வெற்­றிக்­காக “தேவை­யான விட­யங்­களைச் செய்ய” கல்வி கற்க வேண்டும். மலே­சி­யாவின் பல்­வேறு சமூ­கத்தில், தலை­வர்கள் “வெவ்­வேறு இன மக்­க­ளுடன் பழகி அவர்­களின் தேவை­களைப் புரிந்து கொள்ள வேண்டும்.”


முஸ்லிம் உலகில் ஒற்றுமையின்மை குறித்து நான் வருத்தப்படுகிறேன், குறிப்பாக பலஸ்தீனம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் முஸ்லிம் நாடுகளிடம் ஒற்றுமையில்லை. OIC (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு) ஒருமித்த கருத்தை எட்டி செயல்பட முடியவில்லை. ஒரு நாடு எதிர்த்தால் கூட எதையும் செய்ய முடியாது. ஏன் இஸ்ரேல் விடயத்தில் கூட OIC இனால் ஒன்றுபட்டுச் செயற்பட முடியவில்லை.


– Vidivelli

No comments

Powered by Blogger.