Header Ads



சஜித் வேட்பாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், பெளத்த வாக்குகள் அதிகரித்துள்ளது - நவீன்

எதிர்வரும் சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வரவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

மாத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரியவருகின்றது. அந்த கட்சியுடன் ஐக்கிய தேசிய கட்சி நடத்திய  பேச்சுவார்த்தை நல்ல நிலையில் இருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பலர் அமைச்சர் சஜித் பிரேமதாசுவுக்கு ஆதரவளிக்க முன்வர இருக்கின்றனர். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் பெளத்த வாக்குகள் சிதறியுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட்டதன் மூலம் எமது பெளத்த வாக்குகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிகரிப்பதற்காக முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.

(எம்.ஆர்.எம். வஸீம்)

No comments

Powered by Blogger.