இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள், கோட்டாபயவுக்கு ஆதரவு
தமது சங்கத்தின் பெரும்பாலானவர்களின் ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்டோர் இன்று (18) மிஹியான பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தமது சங்கத்தின் ஆதரவை தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, தனியார் துறையாகிய தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளதாக கூறினார்.
Post a Comment