Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார், என்ன தடைகள் வந்தாலும் எதிர்கொள்வேன் - சஜித்

(ஆர்.யசி)

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சரும்மான சஜித் பிரேமதாச, என்ன தடைகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு களமறிங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் பொறுப்பை கையிலெடுக்க தயார் என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன்.  

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் அதுவாகவே அமைந்தது.  ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படியாக நான் இதனைக் கூறினேன். இதில் பல தடைகள் வரும். அழுத்தங்கள் வரும் ஆனால் சவால்களை எதிர்கொள்ள இப்போது நான் தயார். யார் தடுத்தாலும் நான் தலைமைத்துவத்தை ஏற்றுகொள்ள தீர்மானித்துள்ளேன் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் அதிகமாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில் அதுகுறித்தும் தமது தனிப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.