Header Ads



சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த, வைத்தியர் குறித்த தகவல் கிடைத்ததா..?

சிங்கள பெளத்த பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வைத்தியர் குறித்த தகவல் கிடைத்ததா? இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என சபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள்  கேள்வி எழுப்பினர். 

இந்த குற்றச்சாட்டு குறித்து விசேட விசாரணை ஒன்றினை நடத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை சபை நகர்வுகளின் போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு சத்திரசிகிச்சை செய்ததாக நேற்று சிங்கள ஊடகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இது குறித்த உண்மைத்தன்மை என்ன? என கேள்வி எழுப்பினர், 

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் :- இது குறித்து இன்று -24- காலையிலும் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில் வினவினேன். இது குறித்து கடினமான விசேட விசாரணை ஒன்றினை நடத்தக் கோரியுள்ளேன் என்றார். 

No comments

Powered by Blogger.