Header Ads



இந்நாட்டை இஸ்லாமிய நாடாக்கி, முஸ்லிம்களை மட்டும் வாழவிட IS தீவிரவாதிகள் திட்டம் - முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் துணை

சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் இனக் கலவரத்தை ஏற்படுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் வகுத்துள்ளதோடு அதற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட வாள்களும், கத்திகளுமே தற்போது பள்ளிவாசல்களில் இருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்படுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும்,

இலங்கையை இஸ்லாமிய நாடாக்குவதே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நோக்கமாக இருக்கின்றது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமன்றி பௌத்த விகாரைகள், இந்துக் கோயில்கள் ஆகியவற்றிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மதக் கலவரத்தை அரங்கேற்றி ஒரு பகுதியினரைக் கொலைசெய்வது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் முதலாவது திட்டம்.

அதன் பின்னர், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தி எஞ்சியோரைக் கொலை செய்வது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது திட்டம்.

இதற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட வாள்களும், கத்திகளுமே தற்போது பள்ளிவாசல்களில் இருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் இருந்தும் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்படுகின்றன.

ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் அரச தரப்பினரும் கைகட்டி வேடிக்கை பார்க்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளையும், அவர்களின் உறவினர்களையும் இந்நாட்டிலிருந்து இல்லாதொழிக்க வேண்டும்.

இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கி அதில் முஸ்லிம் மக்களை மட்டும் வாழ விடும் வகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வகுத்த திட்டத்துக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயுள்ளனர்.

அவர்கள் யார் என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

அவர்கள் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் செல்லப்பிள்ளைகளாக இருக்கின்றார்கள்.

அவர்களையும் அரசு உடன் கைதுசெய்ய வேண்டும். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. Ventha punnil velai paaichchukireerkal aiyaa...

    ReplyDelete
  2. So காபீர்கள் அனைவரும் ஒரு பக்கம்.

    ReplyDelete
  3. தம்பி சிங்கள மொழியைதவிர வேறு எந்த மொழியும் எதரியாதுபோலும் அதனால்தான் உலகத்தில் என்ன நடக்கின்றது என்று கண்டறிய தெரியாமல் இருக்கின்றார்
    ஆனால் உங்கள் கூட்டத்தாரின் நேர்தல் நிகழ்சி நிரல் நன்றாக நிறைவேற்றப்படுகின்றன!

    ReplyDelete
  4. ஆமா இந்த திட்டம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?

    ReplyDelete
  5. ஒரு வேலை இவர் இந்த திட்டம் போட்டாரோ

    ReplyDelete
  6. @NKG, காப்பியர் vs Terrorists

    ReplyDelete
  7. We need no such a country

    ReplyDelete
  8. NGK பெரிய கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.