காலியில் விஹாராதிபதி, அடித்துக் கொலை - 75 வயது முதியவர் கைது
காலி - மாபலகமவில் அமைந்துள்ள விஹாரையொன்றின் விஹாராதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாபலகம ஆதுமலே வித்தியாலதிலக்க பிரிவெனவின் விஹாராதிபதி மாபலகம குணசிறி தேரரே இவ்வாறு, விஹாரைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தடிகளினால் தாக்கி இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விஹாராதிபதிக்கும், விஹாரையில் தங்கியிருந்த நபர் ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே விஹாராதிபதி கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலி – மாபலகம பகுதியில் தேரர் ஒருவர் கொலையுண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த விகாரையில் தொழிலாளியாக பணியாற்றி வந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வதுரம்ப பகுதியைச் சேர்ந்த 75 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment