Header Ads



சோதனை எனும் பேரில், அல்குர்ஆன் பிரதிகளை தூக்கிவீசும் சம்பவங்கள்

பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளின் பேரில் முஸ்லிம்கள் மீது கெடுபிடிகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சிவில் அமைப்புகள் ஆளுனர் அசாத் சாலியை சந்தித்திருந்தனர்.

இப்பின்னணியில் இது பற்றி பிரதமருடன்  நேரடியாக கலந்துரையாடிய ஆளுனர், பாதுகாப்பு படையினர் பள்ளிவாசல்களுக்கு சென்றதும் முதல் வேலையாக சிசிடிவி கமராக்களை அணைத்து விட்டு, சப்பாத்துக் கால்களுடன் பள்ளிவாசல்களுக்குள் செல்வதுடன் மோப்ப நாய்களை உள்ளே எடுத்துச் செல்வதையும் பல சந்தர்ப்பங்களில் சோதனை எனும் பேரில் அல்-குர்ஆன் பிரதிகளை தூக்கி வீசும் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பது குறித்தும் சுட்டிக்காட்டி கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயத்துக்கு உடனடியாக தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் வீடுகள் தொடர்ச்சியாக சோதனையிடப்பட்டு வரும் அதேவேளை முஸ்லிம் சமூகம் கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர விட டுடியாது என தெரிவித்த மேல் மாகாண ஆளுனர் ஜனாதிபதி, பிரதமரின் நேரடி தலையீட்டை இதில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. SO

6 comments:

  1. உண்மை பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் எதிர்க்கும் அதே நேரம் எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காது அதற்காக எதிர்ப்புகளையும் தெரிவித்து எமது சுதந்திரத்தை வெல்ல வேண்டும் இவ்வாரான கெடுபிடிகளை கண்டால் எமது ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

    ReplyDelete
  2. இதுவும் உண்மையே. இப்போதே இதனை மட்டு ப் படு த் தா விட்டால் நிலைமைகள் மேலும் மோசமடையும்.
    அந்த சிவில் அமைப்பு க் களுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஏன் பள்ளிவாசல்களை படையினர் சோதனை செய்யவேண்டிய நிலமையை ஏற்படுத்துனீர்கள்??

    30 வருட கால புலி யுத்த காலங்களில், ஒரு போதும் படையினர் சேர்ச்/கோவில்களில் தேடுதல் நடத்தவில்லையே

    ReplyDelete
  4. Ajan புலி பயங்கரவாதிகளுக்கு தமிழர்களின் வீடுகள் அனைத்தும் அடைக்கலம் கொடுத்ததால் கோவிலிகளை தேடவேண்டிய தேவைகள் இருக்க வேண்டியதில்லை. அதனால் தான் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் பயங்கரவாதிகளை இராணுவம் அழித்தது.

    ReplyDelete
  5. INDA SOODANAIHAL RAMADAN KUL ,UDIKAWIDIN VEEDIYIL ARANGI POORADUWOM. RAMADAN KAALANGALIL ANGALUKKU NIMMADIYAHA NOONBU PIDIKKA VIDUNGAL. SHALA INANGALAYUM MADANGALAYUM ONRINAIKA WALI WAHUPPADU ARASANGATHIN KADAMAI

    ReplyDelete
  6. இனவாதத்தை கக்கிக் கக்கி தீவிரவாதிகளை இவர்களே உருவாக்குகிறார்கள்

    ReplyDelete

Powered by Blogger.