தென்கிழக்கு பல்கலைகழகம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம், கடற்படையினரால் சோதனை (படங்கள்)
-பாறுக் ஷிஹான்-
தென்கிழக்கு பல்கலைகழகம் சுற்றிவளைக்கப்பட்டு இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இன்று(29) மாலை அம்பாறை மாவட்டம் ஒலிவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழக மாணவர் விடுதி அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான படையினர் இத் தேடுதலில் பங்கேற்றதுடன் கனகர வாகனங்களும் பல்கலைகழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒலுவிலின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Post a Comment