Header Ads



தேசிய தெளஹீத் ஜமாத்தின் குளியாபிட்டிய அமைப்பாளர் கைது - சஹ்ரான் பல தடைவைகள் வந்ததாக குற்றச்சாட்டு

(எம்.எப்.எம்.பஸீர்)

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் குளியாபிட்டி பிரதேச அமைப்பாளர் இன்று மேல் மாகாண உளவுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.  

மேல் மாகாண உளவுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக அவரது எத்துன்கஹகொட்டுவ வீட்டை சோதனைச் செய்து அவரைக் கைது செய்ததாகவும் சந்தேக நபர் 42 வயதான இரு பிள்ளைகளின் தந்தை எனவும் பிரதேசத்தின் மெளலவி ஒருவர் எனவும் பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு  2015 ஆம் ஆண்டு முதல் தேசிய தளஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் பல தடைவைகள் வந்து சென்றுள்ளதாகவும் அவரால் அங்கு இளைஞர் யுவதிகளுக்கு  உபன்னியாசங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர். 

No comments

Powered by Blogger.