கட்டார் விபத்தில் இலங்கையர் மரணம்
கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஓட்டமாவடி - மீராவோடையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் லத்தீப் என்பவரின் மகனான ஹஸான் ஆவார்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கட்டார் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment