ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய போட்டியிடுவதனை, தடுக்கும் உள்ளக சக்திகளை தோற்கடிப்போம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதனை தடுக்கும் உள்ளக சக்திகளை தோற்கடிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ பகுதியில் இன்று -02- நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதனை தடுப்பதற்கு தமது தரப்பிலேயே சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சதித் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு நிச்சயமாக கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு வேட்பாளராக களமிறக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment