எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்த, பெண் பொலிஸார் களமிறக்கப்படுவர்
எதிர்ப்பு போராட்டங்களின் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்வாறான போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துவது சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவை ஏற்பட்டால் எதிர்காலத்திலும் பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் போராட்டங்களின் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Post a Comment