Header Ads



தன்னுடைய வார்த்தைக்கு மதிப்பளித்த, ரணிலை பாராட்டும் ரஞ்சன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, இது தொடர்பில் விசாரணை செய்ய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் நியமிக்கப்பட்டக் குழுவில் குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்கான ஒருவரும் நியமிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளாரென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான் பிரதமரிடம் தெரிவித்தப் பின்னர், தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குறித்த உறுப்பினரை அக்குழுவிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளாரென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.