Header Ads



டேய் மாமா,, "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"...?


தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, குசல் ஜனித் பெரேராவின் ஆட்டத்தினால் திரில் வெற்றி பெற்றது.

இந் நிலையில் இந்த வெற்றிக் களிப்பினை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஷல் ஆர்னோல்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதவிட்டு மகிழந்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 

"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? ஹாஹாஹா.., டேய் மாமா, குசல் பெரேரா எப்படி வைச்சு செஞ்சான் பாத்தியா, அவுங்க ஆளுங்க, அவுங்க இடம், அவுங்க போலர், எங்களுக்கு பயம் இல்ல, அதுக்கு இதுதான் சாம்பில் (உதாரணம்) என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை கிரக்கெட் அணியும் இந்த வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.