Header Ads



போதைப் பொருள் பயன்படுத்தும் 24 அரசியல்வாதிகளின் விபரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு

கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை தான் சபாநாயகருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஒப்படைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இன்று (18) தெரிவித்துள்ளார்.

கபினட் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உட்பட மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கொக்கேன் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களின் காரியாலய உறுப்பினர்களும் உயர் பதவிகளிலுள்ளவர்களும் கூட இந்த போதைப் பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்பதனால்,  அவர்களது பெயர்களை வெளிப்படுத்துவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாதிவெலயில் உள்ள தனது இல்லத்தில் இன்று (18) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 

2 comments:

  1. mattu samburaniyellam paralumanththuku anuppi nanga padra padu.

    ReplyDelete
  2. President must set death penalty in motion immediately to eradicate drug dealers & smugglers.

    ReplyDelete

Powered by Blogger.