Header Ads



"ஆபத்தான அழைப்பாளர்களால், முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் நெருக்கடி"


-Abu Ariya-

அல்குர்ஆனினிலும் ஹதீஸ்களிலும் பொதிந்துள்ள உள்ளார்ந்த கருத்துக்களை சரிவர புரிந்துகொள்ளாது; மேலோட்டமாக வாசித்துவிட்டு தனக்கு பட்டதற்கு ஏற்றாற்போல் வியாக்கியானம் கொடுத்துக்கொண்டு மார்க்கத்தை கொச்சைப்படுத்தும் அழைப்பாளர்கள் இலங்கையில் அதிகரித்து வருகிறார்கள்.

இவர்களால் முழு இலங்கை முஸ்லிம்களும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய அவல நிலை உருவாகலாம். இதற்கு சிறந்த உதாரணமே! அண்மையில் நடைபெற்ற மாவனல்லை சம்பவமும். அதன் தொடரான புத்தள கைது நடவடிக்கையுமாகும்.

உலக மனிதர்கள் பின்பற்றி ஒழுகுவதற்கு மிகப்பொருத்தமான இந்த தூய்மையான இஸ்லாம் மார்க்கம்; மனித நலன்களின் மீதான தனது விரிந்த பண்பாட்டை கட்டியெழுப்பியுள்ளது. இஸ்லாம் ஒருபோதும் குழப்பத்திற்கும் தீவிரவாதத்திற்கும் அடித்தளம் இடும் கோட்பாட்டை தன்னுள் கொண்டது கிடையாது.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் தங்களை மார்க்கத்தின் தீவிர பற்றாளர்களாக வலிந்து அடையாளப்படுத்திக்கொள்ளும் சில போதகர்கள் அறிவற்ற; கால சந்தர்ப்ப சூழ்நிலைக்கு பொருத்தமற்ற; இஸ்லாமிய போதனைக்கு மாற்றமான கருத்துக்களை அழைப்பு மொழிகளாகப் பயன்படுத்திக்கொண்டு பல இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இவ்வாறான நெறிபிறழ்வான அழைப்பாளர்களிடமிருந்து எம்மையும் எமது சந்ததியினையும் பாதுகாத்துக்கொள்வோம். அதற்காக இஸ்லாம் எனும் புனித மார்க்கத்தை அறிவுபூர்வமாக பின்பற்றி ஒழுகுவோம்.

3 comments:

  1. You are really correct.

    Every group claim that they follow Quran and Sunnah of Muhammed (sal)... but each group interpret in their own understanding, which will definitely differ group to group.

    BUT Every one of us should understand that..

    ISLAM is QURAN and Sunnah of Muhammed (sal)... BUT also should be understood the way these were Understood by Sahaaba, Tabieen and Atabaut Tabieen (salafus saliheens).

    So Those who do not follow the way of Salafus saliheens in understanding the Religion will definitely will bring misguidance, extremism and modernizing the message to corrupt themselves and others.

    May Allah guide us in the path of Salafus saliheens in understanding the message of Islam and Practice it in our life.

    ReplyDelete
  2. பணம் கொடுப்பவர்கள் சொல்வது தான் இக்குழுக்களின் இஸ்லாம்.

    ReplyDelete
  3. Ithu maathiri veshangalai kalainthaale pothum....!!!

    ReplyDelete

Powered by Blogger.