Header Ads



வெளிநாடுகளில் வாழும், இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக நிரந்தர வதிவிட விசாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

வதிவிட விசா வழங்குவதன் மூலம் இலங்கையர்களின் அறிவையும் ஆற்றல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வது திட்டத்தின் நோக்கம்.

நிரந்தர வதிவிட வஜசாவை பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பல உரிமைகளை பெற முடியும்.

இதன்மூலம் இலங்கையில் முதலீடு செய்தல், காணிகளை குத்தகைக்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற அனுகூலங்கள் முக்கியமானவை என ஹெட்டியாராச்சி கூறினார்.

இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது.

மேலும் ஐயாயிரம் பேர் இரட்டை பிரஜாவுரிமைக்காக காத்திருப்பதாகவும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.