ஐக்கிய தேசிய கட்சியே, எமது பொது எதிரி - சுதந்திரக் கட்சி பிரகடனம்
ஐக்கிய தேசிய கட்சியே தமது பொது எதிரி என்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், நேற்றிரவு நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உருவாக்கப்படுகின்ற கூட்டணி ஊடாக முன்னோக்கிச் செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு சவாலாக அமையாதென, அவர் மேலும் கூறினார்.
Hiding behind SLPP......
ReplyDelete