Header Ads



பாராளுமன்றம் நாளை 10.30 மணிவரை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நாளை (30) காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 

இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

அதன் பின்னர் பாராளுமன்றத்தை பிற்போடுவதாக சபாநாயகர் அறிவித்தார். 

இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தற்போது பாராளுமன்றத்துக்கு நாட்டின் அமைச்சர் பருக்கும் தொடர்புகள் இல்லை,

    பாராளுமன்றம் கூடுது கலையுது, அமைச்சர்கள் பாராளுமன்றத்தை புறக்கணிக்கிறார்கள். தீர்மானங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறுகிறது. கனவிருக்கும் சினிமாவிலும் வரும் விடயங்கள் மாதிரி இருக்குது இலங்கையின் நிலைமை.

    ReplyDelete

Powered by Blogger.