Header Ads



ஹெலியில் பறக்க, ஒரு மாதத்தில் 840 இலட்சத்தை செலவிட்டுள்ள மகிந்த


பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.