Header Ads



உலக வரலாற்றிலேயே மோசமான, குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை

ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ரஷ்யாவை சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி (37) - ஓல்கா  தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்பதுக்கும் அதிகமான சிறுவர்-சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும்  265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த விக்டர்  தான் வளர்த்த 12 முதல் 17 வயது சிறுமிகளை ஐந்து ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி ஓல்காவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஓல்கா உடனடியாக போலீசாருக்கு  தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  குற்றவாளி விக்டரை  கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய ஓல்கா  ஐந்து ஆண்டுகளாக எனக்கு தெரியாமலே இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த சிறுமியும் என்னிடம் கூறவில்லை. ஏனெனில் அனைவருமே அவரை தங்களுடைய தந்தையாகவே கருதி வந்தனர் என தெரிவித்தார்.

இந்த நிலையில் குற்றவாளி விக்டரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குற்றவாளி, சிறுமிகளை கொடுமைப்படுத்தி தன்னுடைய பாலியல் அடிமைகளாக 900-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே விக்டர்தான்  தான் மோசமான ஒரு குற்றவாளி என தெரிவித்த நீதிபதி, அவனுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments

Powered by Blogger.