Header Ads



பள்ளிவாயல் உண்டியல் 3 ஆவது தடவையாக உடைக்கப்பட்டு பணம் கொள்ளை

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தின் பதுரியா பள்ளிவாயல் உண்டில் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளார்.

பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயலில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பள்ளிவாயல் நிர்வாக சபையினரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 தொழுகையினை முடித்து பள்ளிவாயலில் இருந்து வெளியே வந்தவர்கள் பள்ளிவாயல் உண்டியல் திறந்திருப்பதைக் கண்டு பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், இந்த வருடம் மாத்திரம் மூன்றாவது தடவை இவ்வாறு பள்ளிவாயல் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.