Header Ads



சைப்ரஸை கைப்பற்ற யூதர்கள் முயற்சி, பலஸ்தீனத்தை நினைவில் கொள்க - முக்கிய எதிர்கட்சி எச்சரிக்கை


சைப்ரஸின் முக்கிய எதிர்க்கட்சியான AKEL-இன் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனோஸ் ஸ்டெபனோ, யூதர்கள் சைப்ரஸைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சியோனிச இஸ்ரேலியர்கள் நிலங்களையும் சொத்துக்களையும் வாங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், ஃபலஸ்தீனத்தில் நடந்த ஆக்கிரமிப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


ஸ்டெபனோஸ் ஸ்டெபனோ மேலும் கூறியதாவது:


"சைப்ரஸில் உள்ள நிலத்தில் நான்கில் ஒரு பங்கு தற்போது யூதர்களின் கைகளில் உள்ளது. அவர்கள் திட்டமிட்டு குடியிருப்புகளை உருவாக்குகிறார்கள், சியோனிஸ்ட் பள்ளிகளைத் திறக்கிறார்கள், பொருளாதாரத் துறையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டனர். இப்போது நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த நாடு இனி நம்முடையதாக இருக்காது."


சியோனிச இஸ்ரேலின் குற்றச்சாட்டை நிராகரித்த ஸ்டெபனோ,  ஸ்டெபனோஸ் ஸ்டெபனோவின் இந்தக் கருத்து யூத-விரோதமானது (Anti-Semitism) என்று சியோனிச  இஸ்ரேல் வழக்கம்போல் குற்றம் சாட்டியது. ஆனால், ஸ்டெபனோ இதை நிராகரித்துள்ளார்.


 ஃபலஸ்தீனத்தில் யூதர்கள் ஆக்கிரமிப்பு செய்த உதாரணம் இருக்கும்போது, தன் வார்த்தைகளில் எப்படி யூத-விரோதம் இருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.


கடவுள் தங்களுக்கு சைப்ரஸை வழங்கியுள்ளார் என்ற பிரச்சாரத்தை சியோனிஸ்டுகள் மேற்கொண்டு வருவதாகவும், ஸ்டெபனோ சுட்டிக்காட்டினார். சைப்ரஸ் தீவில் அவர்கள் புதிய நகரங்களை ஏற்கனவே கட்டியுள்ளனர். தீவிர சியோனிஸ்டுகளான கபாட் யூதர்கள் (Chabad Jews) பல மையங்களை நிறுவியுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


Thejas News

No comments

Powered by Blogger.