Header Ads



குற்றவாளிகளை 1 மாதத்தில் கண்டுபிடிப்பேன் - மேர்வின் சில்வா

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் படுகொலை விசாரணையை தம்மிடம் ஒப்படைத்தால், குற்றவாளிகளை ஒரு மாதத்தில் கண்டுபிடித்துக் காண்பிப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கம்பஹா மாவட்டத்தில் மிகவும் ஜனரஞ்சகமான ஒருவர் என சுட்டிக்காட்டிய மேர்வின் சில்வா, ராஜபக்ஸ குடும்பத்தாருடன் அவருக்கு மாற்றுக்கருத்து இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜெயராஜிற்கு பொலிசாரிடம் இருந்தே அதிக அச்சுறுத்தல் இருந்ததாகவும் மேர்வின் சில்வா மேலும் கூறினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே மேர்வின் சில்வா இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

1 comment:

  1. மனநோயாளி சமூகத்தில் இடம்பிடிக்க மற்றுமொரு குண்டு.

    ReplyDelete

Powered by Blogger.