Header Ads



கூட்டில் அடைக்கப்பட்டிருந்த, தாய் மீட்பு - கல்கிஸ்ஸயில் அதிர்ச்சி


86 வயதான தாயொருவர் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, கல்கிஸ்ஸ பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் அதிகாரிகளால் குறித்த தாய் காப்பாற்றப்பட்ட சம்பவமானது கல்கிஸ்ஸ கல்வலபார பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

3 பெண்களும், 1 ஆணுமென 4 குழந்தைகளின் தாயான இவர் 4 அடி அகலமும், 5 அடி நீளமுமான பலகை மற்றும் சீமெந்து கற்கலினால் அமைக்கப்பட்ட கூடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாயின் மகளொருவர் தங்கியிருந்த வீட்டுக்கு வெளியிலேயே இந்த தாய் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூடு காணப்பட்டுள்ளது.

பாதுகாப்பை கருத்திற்கொண்டே தாயை தனிமைப்படுத்தி வைத்ததாக அவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரால் காப்பாற்றப்பட்ட தாய் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.